Friday 12 May 2017

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!


தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!


Related imageலண்டன்: கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும்
குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


Image result for cooked fish
மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் 
தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. 

Image result for cooked whole fish               லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு 
வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை 
முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
Related image               அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.


          32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு 

Image result for BABY BRAIN IN PREGNANACYபுத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


PLEASE POST YOUR COMMENT..

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது

Image result for pregnancy      பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் தனியாக இருக்கும் போது எந்த செயலையும் பயமின்றி செய்யலாம். ஆனால் கருவை சுமக்கும் போது ஒரு சில செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் பெண்கள், தைரியமாக எந்த ஒரு செயலையும் துணிந்து செய்கின்றனர். துணிச்சல் இருக்க வேண்டியது தான். ஆனால் அதே சமயம் சற்று கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது எந்த நோய் எப்போது வரும் என்பது தெரியாது.

       நமது உடலை நாம் தான் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் நமது வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கர்ப்பமாக இருக்கும் போது,இது செய்ய வேண்டும் இது செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவை அனைத்தும் நமது நன்மைக்கே. ஆகவே அவ்வாறு சொல்லும் செயல்களில், கர்ப்பமாக இருக்கும் போது எவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்று குழந்தைப்பேறு மருத்துவர் சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். 

Image result for glass of water       தண்ணீர் கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அந்த அளவு கருச்சிதைவு தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் தடுக்கப்படும். ஆகவே ஒரு நாளைக்கு கர்ப்பிணிகள் குறைந்தது, 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

Image result for cat\        வீட்டில் ஆசையாக பூனை வளர்த்தால், அதன் கழிவுகளை கர்ப்பமாக இருக்கும் போது சுத்தம் செய்வதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவற்றில் டாக்சோப்ளாஸ்மோசிஸ் என்னும் தொற்றுநோயை உண்டாக்கும் கிருமியானது உள்ளது. இந்த கிருமி உடலில் நுழைந்துவிட்டால், மூளை பாதிப்பு மற்றும் கண் பார்வை கோளாறு போன்றவற்றை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படுத்தும். 
Image result for banana

       வாழைப்பழம் கர்ப்பத்தின் போது கால் குடைச்சல், குதிகால் வலி போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியை சரிசெய்ய தினமும் ஒரு வாழைப்பழத்தை படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் வலிகள் மற்றும் குடைச்சலை சரிசெய்யும்.

PLEASE POST YOUR COMMENTS..

Thursday 11 May 2017

கர்ப்ப கால குழந்தையின் அளவு.

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா? 

ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், குழந்தையை கையில் எடுத்தும் கொஞ்சும் வரை அக்குழந்தையின் நினைவிலேயே இருப்பாள். கர்ப்ப காலத்தில் குழந்தை ஒவ்வொரு வாரமும் வளர்ச்சி பெறும். சொல்லப்போனால் குழந்தையின் வளர்ச்சி ஒரு அபூர்வமான ஒன்று என்றும் கூறலாம்.

Image result for pregnancy baby size chart
Image result for pregnancy baby size chart

Monday 24 April 2017

தூக்கமின்மை குறைய

தூக்கமின்மை குறைய  

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.


Image result for saltஅறிகுறிகள்:
  • தூக்கமின்மை.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயம்.
  2. உப்பு.
செய்முறை:
வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

Tuesday 11 April 2017

கம்பளி பூச்சு கடித்தல்

கம்பளிபூச்சிகம்பளி பூச்சு கடித்தல்

அறிகுறிகள்:
    வெற்றிலை
  1. புழுவின் உரோமம் மேல் படுதல்.
  2. உடல் முழுவதும் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. வெற்றிலை.
செய்முறை:
ஒரு வெற்றிலையை எடுத்து கடி பட்ட இடத்தில் சாறு வரும் படி அழுத்தி தேய்க்கவும்.

க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு குறைய


Image result for murungai keeraiஅறிகுறிகள்:
  1. க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. முருங்கைஇலை.
செய்முறை:
க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் முருங்கை இலையை அரைத்து ப‌ற்றுப்போட‌ அரிப்பு குறையும் .


கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் அரிப்பு குறைய 

Image result for gingle oil
அறிகுறிகள்:
  1. உரோமம் பட்ட இடத்தில் வீக்கம்.
  2. உரோமம் பட்ட இடத்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்.
செய்முறை:
கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து விட அரிப்பு குறையும்.

பசியின்மை குறைய

பசியின்மை குறைய

சீரகம் சர்க்கரை கறிவேப்பிலை 
அறிகுறிகள்:
  • பசியின்மை.
  • அஜீரணம்.
  • வயிறுஉப்பிசமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்.
  2. இஞ்சி.
  3. கருவேப்பிலை.
  4. சர்க்கரை.
செய்முறை:
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.

Wednesday 5 April 2017

வாத மூட்டுவலி குறைய

வாத மூட்டுவலி குறைய:

கடுகு எண்ணெய் வெங்காயச் சாறு 

அறிகுறிகள்:

வாதம்.
  • மூட்டுவலி.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயச் சாறு.
  2. கடுகு எண்ணெய்.
செய்முறை:
வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் வாத மூட்டுவலி குறையும்.

வாதக்காய்ச்சல் குறைய:

கறிவேப்பிலை ஈர்க்கு வேம்பு ஈர்க்கு முருங்கை ஈர்க்கு 
அறிகுறிகள்:
  • வாதக்காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
    Image result for nelli
  1. கறிவேப்பிலை ஈர்க்கு.
  2. வேம்பு ஈர்க்கு
  3. முருங்கை ஈர்க்கு.
  4. நெல்லி ஈர்க்கு.
  5. சுக்கு.
  6. மிளகு.
  7. சீரகம்.
செய்முறை:
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி ஒரு மடக்கு வீதம் தினமும் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு! லண்டன்: கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்க...